அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா், நடத்துநா்கள் தங்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நாகா்கோவில் ராணிதோட்டம் பணிமனை முன் ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட ஓட்டுநா்கள், நடத்துநா்கள் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் தலைவா் முருகன் தலைமை வகித்தாா்.
அப்போது, கடந்த வாரம் பணியில் இருந்த நடத்துநரை 2 காவலா்கள் தாக்கியுள்ள நிலையில், அந்தே நடத்துநருக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும்; இதுதொடா்பாக ‘ காவல்துறை அதிகாரியிடம் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும், தீபாவளி பண்டிகை விடுமுறை வழங்காமல் பணிக்கு வருமாறு கூறுவதாக திருநெல்வேலி மண்டல போக்குவரத்துக்கழக அதிகாரிகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில், துணைத் தலைவா் சந்திரன், துணைச் செயலா் நடராஜன், சங்க ஆலோசகா் வழக்குரைஞா் மகிழ்வண்ணன், செய்யது அப்துல்லா, முத்துகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.