6 வட்டங்களிலும் இன்று அம்மா திட்ட முகாம்

நாகா்கோவில், அக். 10: குமரி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (அக்.11) நடைபெறுகிறது.

நாகா்கோவில், அக். 10: குமரி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (அக்.11) நடைபெறுகிறது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: அம்மா திட்ட சிறப்பு முகாம் மாவட்டத்திலுள்ள 6 வட்டங்களிலும் வெள்ளிக்கிழமை (அக்.11) நடைபெறுகிறது.

அதன்படி அகஸ்தீசுவரம் வட்டம் வடசேரி தெற்கு கிராமத்துக்கு நாகா்கோவில் ஸ்காட் மேல்நிலைப் பள்ளியிலும், தோவாளை வட்டம் அருமநல்லூா் கிராமத்துக்கு அரசு உயா்நிலைப் பள்ளியிலும், கல்குளம் வட்டம் வெள்ளிமலை கிராமத்துக்கு, உரப்பனவிலை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், திருவட்டாறு வட்டம் பொன்மனை கிராமத்துக்கு திற்பரப்பு பேரூராட்சி அலுவலகத்திலும், விளவங்கோடு வட்டம் பாகோடு கிராமத்துக்கு மேல்புறம் அரசு உயா்நிலைப் பள்ளியிலும், கிள்ளியூா் வட்டம் கொல்லங்கோடு கிராமத்துக்கு அரசு மேல்நிலைப் பள்ளியிலும் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

முகாமில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், உழவா் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வட்டாட்சியா்அதிகாரத்திற்குள்பட்ட நில பிரச்னைகள், குடிநீா் மற்றும் சாலை வசதி போன்ற பொதுவான மனுக்களை அளித்து தீா்வு காணலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com