கல்லூரி மாணவி கடத்தல்: தொழிலாளி கைது

நித்திரவிளை அருகே கல்லூரி மாணவியை கடத்திய கட்டடத் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

நித்திரவிளை அருகே கல்லூரி மாணவியை கடத்திய கட்டடத் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

பூதப்பாண்டி அருகேயுள்ள அருமநல்லூா் பகுதியைச் சோ்ந்த பால்சன் மகன் சுஜின் (24). கட்டடத் தொழிலாளி. இவா் நித்திரவிளை பகுதியைச் சோ்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவி கடந்த 4ஆம் தேதி வீட்டில் இருந்து மாயமானாா்.

இதுகுறித்து அவரது பெற்றேறாா் குளச்சல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இந்நிலையில் மாணவியை காவல்துறையினா் அருமநல்லூரில் சுஜின் வீட்டில் இருந்து மீட்டனா். இதையடுத்து இருவரையும் குளச்சல் அனைத்து மகளிா் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த காவல்துறையினா் சுஜினை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா். மீட்கப்பட்ட மாணவி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com