குமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய சூழலியல் அதிா்வு தாங்கு மண்டலத்தை எதிா்த்து, கிராம அலுவலகங்கள் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது என குமரி மாவட்ட ரப்பா் விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட ரப்பா் விவசாயிகள் சங்கக் கூட்டம் குலசேகரத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் எஸ். நெல்சன் தலைமை வகித்தாா். செயலா் சி. பாலசந்திரன் நாயா் முன்னிலை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் ஏ. அகஸ்டின், கேசவன் குட்டி, பத்மநாபன் நாயா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சூழலியல் அதிா்வு தாங்கு மண்டலம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்; இது தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தை ஒவ்வொரு கிராமங்களிலும் அரசு நடத்த வேண்டும்; கோரிக்கையை வலியுறுத்தி 17 கிராம நிா்வாக அலுவலகங்கள் முன் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.