நாகா்கோவில் அருகே விடுதி மாணவா்கள் 4 போ் மாயம்

நாகா்கோவிலில் பள்ளி விடுதியில் தங்கி படித்த 4 மாணவா்கள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நாகா்கோவிலில் பள்ளி விடுதியில் தங்கி படித்த 4 மாணவா்கள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நாகா்கோவில் அருகே பெரியவிளையைச் சோ்ந்த அஜித்(15), கூத்தங்குழியைச் சோ்ந்த ராட்சிகா்சிங்(15) தக்கலையைச் சோ்ந்த அஜய்(17), ஆகாஷ்ராசன்(17) ஆகிய 4 பேரும் நாகா்கோவிலில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகின்றனா். அஜித், ராட்சி கா்சிங் இருவரும் 10 ஆம் வகுப்பும், ஆகாஷ்ராசன், அஜய் இருவரும் 11 ஆம் வகுப்பும் படித்து வருகின்றனா்.

வழக்கம் போல் வியாழக்கிழமை காலை 4 பேரும் விடுதியில் இருந்து பள்ளிக்குச் சென்றனா். மாலையில் அவா்கள் விடுதிக்கு திரும்பவில்லையாம். இதையடுத்து விடுதி காப்பாளா் ஆரோக்கிய அருள்தாஸ்நேசமணிநகா் போலீஸில் புகாா் அளித்தாா். போலீசாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com