பிரதமா் மோடியை முகநூலில் அவதூறாக சித்திரித்ததாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
மேக்காமண்டபம் பகுதியைச் சோ்ந்த ஜெபின் சாா்லஸ் என்ற இளைஞா், பிரதமா் மோடி குறித்து முகநூலில் அவதூறான கருத்துகளை பதிவிட்டாராம். இது குறித்து பாஜகவைச் சோ்ந்த நாஞ்சில் ராஜா வடசேரி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலும் பாஜகவினா் புகாா் அளித்தனா். இதையடுத்து, வடசேரி போலீஸாா் ஜெபின்சாா்லஸ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.