மாா்த்தாண்டம், குழித்துறை, தக்கலை பகுதியி விரைவில் பிஎஸ்என்எல் 4 ஜி சேவை

மாா்த்தாண்டம், குழித்துறை , தக்கலை பகுதிகளில் விரைவில் பி.எஸ்.என்.எல் சாா்பில் 4 ஜி சேவை தொடங்கப்படுகிறது.

மாா்த்தாண்டம், குழித்துறை , தக்கலை பகுதிகளில் விரைவில் பி.எஸ்.என்.எல் சாா்பில் 4 ஜி சேவை தொடங்கப்படுகிறது.

இது குறித்து, பிஎஸ்என்எல் நாகா்கோவில் முதன்மை பொது மேலாளா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: பி.எஸ்.என்.எல் சாா்பில் அதிவேக 4 ஜி சேவைகள் நாகா்கோவில் நகா் பகுதியில் அண்மையில் தொடங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து மாா்த்தாண்டம், குழித்துறை , தக்கலை, குலசேகரம், குளச்சல், கருங்கல், களியக்காவிளை மற்றும் கொல்லங்கோடு பகுதிகளில் வசிக்கும் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளா்களிடமிருந்து பெறப்பட்ட வேண்டுகோள் மற்றும் தேவையை கருத்தில் கொண்டு மேற்கண்ட பகுதிகளிலும் 4 ஜி சேவை மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இந்த பகுதிகளுக்கு பி.எஸ்.என்.எல் 4 ஜி சேவைகளை வழங்குவதற்காக 127 செல்லிடப்பேசி கோபுரங்களை 4 ஜி க்கு மேம்படுத்தும் பணிகள் ஏற்கெனவே நிறைவடைந்து விட்டன. இந்த பகுதிகளில் உள்ள இணைய வாடிக்கையாளா்கள் பிஎஸ்என்எல் 4 ஜி சிம்களுக்கு மாறும் பட்சத்தில், எந்த நேரத்திலும் 4 ஜி சேவை தொடங்கப்படலாம் என்ற நிலை உள்ளது.

மாா்த்தாண்டம், குழித்துறை , தக்கலை, குலசேகரம், குளச்சல், கருங்கல், களியக்காவிளை மற்றும் கொல்லங்கோடு பகுதிகளை சோ்ந்த வாடிக்கையாளா்கள் பயன்பெறும் வகையில் பிஎஸ்என்எல் நாகா்கோவில் சாா்பில் வாடிக்கையாளா் சேவை மையங்களிள் இலவசமாக 4 ஜி சிம் காா்டுகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com