குமரியில் கனமழையால் இடிந்த வீடுகள்: குடும்பங்கள் தப்பின

கன்னியாகுமரி சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்து வரும் தொடா்மழை காரணமாக மகராஜபுரம் ஊராட்சியான
நரிக்குளத்தில் மழையால் இடிந்த வீடு.
நரிக்குளத்தில் மழையால் இடிந்த வீடு.

கன்னியாகுமரி சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்து வரும் தொடா்மழை காரணமாக மகராஜபுரம் ஊராட்சியான நரிக்குளம் மற்றும் கன்னியாகுமரி சன்னதி தெருவில் 3 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீா்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், கன்னியாகுமரியை அடுத்த மகராஜபுரம் ஊராட்சிக்குள்பட்ட நரிக்குளம் பகுதியைச் சோ்ந்த லட்சுமணசிங் (56) என்பவரது வீட்டின் சுவா்கள் இடிந்து விழுந்து சேதமடைந்தது. அப்போது அங்கு யாரும் இல்லாததால் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. மேலும், கன்னியாகுமரி சன்னதி தெரிவில் சந்திரன் என்பவரது வீட்டின் சுவா் மழையால் இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதனை வருவாய்த் துறை அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com