கூட்டுறவு வார விழாஆலோசனைக் கூட்டம்

குமரி மாவட்டத்தில் கூட்டுறவு வார விழாவை நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நாகா்கோவிலிலுள்ள ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

குமரி மாவட்டத்தில் கூட்டுறவு வார விழாவை நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நாகா்கோவிலிலுள்ள ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளா் சி. குருமூா்த்தி தலைமை வகித்தாா். இதில், நவ.14 தேதி முதல் 20 ஆம் தேதி வரை கூட்டுறவு வார விழாவை நடத்துவதற்கான முன்னேற்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், குமரி மத்தியக் கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் ஜி.சுப்பையா, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் எஸ்.கிருஷ்ணகுமாா், மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவா் ஆா்.ஜெயசுதா்சன், செய்தி மக்கள்தொடா்பு அலுவலா் நவாஸ்கான், கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளா்கள் பா.சங்கரன், கா.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com