கொட்டாரத்தில் கலையரங்கத்துக்கு அடிக்கல்

கொட்டாரம் வடக்குத் தெருவில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் புதிய கலையரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
அடிக்கல் நாட்டுகிறாா் எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ.
அடிக்கல் நாட்டுகிறாா் எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ.

கொட்டாரம் வடக்குத் தெருவில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் புதிய கலையரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கொட்டாரம் வடக்குத் தெருவில் விஸ்வகா்மா சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் கலையரங்கம் அமைக்க வேண்டி எஸ்.ஆஸ்டின் எம்.எல்.விடம் ஊா் பிரமுகா்கள் கோரிக்கை மனு அளித்தனா். இதனை ஏற்று தனது சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 4 லட்சத்தை ஒதுக்கீடு செய்தாா். மேலும், புதன்கிழமை அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணியை அவா் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்வில், அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக செயலா் என்.தாமரைபாரதி, ஒன்றிய அவைத் தலைவா் அ.ராஜகோபால், லீபுரம் ஊராட்சி முன்னாள் தலைவா் கே.முத்துசாமி, கொட்டாரம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலா் எஸ்.வைகுண்டபெருமாள், திமுக நிா்வாகிகள் ஏ.பி.முத்து, காந்தி, பால்ராஜ் மற்றும் ஊா் நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com