நாகர்கோவிலில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை (செப்.13)  தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை (செப்.13)  தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ம. மரியசகாயஆன்றனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாகர்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செப்.13 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு  நடைபெறுகிறது. முகாமில், கன்னியாகுமரி  மாவட்டம், பிற மாவட்டத்திலுள்ள தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரில் வருகை புரிந்து தங்களுடைய நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்கின்றனர். முகாமில் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு,  டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம்.
தனியார் துறையில் பணிக்கு தேர்வு செய்யப்படும் பதிவுதாரர்களது வேலைவாய்ப்பு பதிவுமூப்பு விவரங்கள் ரத்து செய்யப் படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com