மார்த்தாண்டம் அருகே மாமூட்டுக்கடையில் உள்ள ஆர்.பி.ஏ. சென்ட்ரல் பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
தாளாளர் பிரான்சிஸ் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஷீலாகுமாரி முன்னிலை வகித்தார். மாணவர்களிடையே அத்தப்பூ கோலப் போட்டி, நடனம், பாடல், கலாசாரப் போட்டிகள் நடைபெற்றன.
இதில், நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரிப் பேராசிரியை பிரியா நாயர் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார். இதில், நாட்டு நலப்பணித் திட்ட மாவட்டச் செயலர் ஸ்ரீகண்டன் நாயர், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி ஆசிரியை ஸ்டாரி ஜான் வரவேற்றார்.
ரோஜாவனம் முதியோர் இல்லத்தில்...
நாகர்கோவில் ரோஜாவனம் முதியோர் பராமரிப்பு - பாதுகாப்பு மையத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, ரோஜாவனம் இயக்குநர் அருள் ஜோதி தலைமை வகித்தார். கண்காணிப்பாளர் ஆறுமுகம் வரவேற்றார். மாவட்ட நன்னடத்தை அலுவலர் புஷ்பராஜ் முன்னிலை வகித்தார்.
முதியோரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவர்களுக்கு பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன. திருச்சி மாவட்ட நன்னடத்தை அலுவலர் வெங்கட்ராமன் சிறப்புரையாற்றி, முதியோருக்கு புத்தாடைகளையும், போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில், ரோஜாவனம் முதியோர்கள், சேவையாளர்கள், மருத்துவக் குழுவினர், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர். மைய ஆலோசகர் சாமுவேல் ராஜன் நன்றி கூறினார்.