வாவைப்பதியில் குடிநீர் தொட்டி திறப்பு

கன்னியாகுமரியை அடுத்த ஆமணக்கன்விளை அய்யா வைகுண்டசாமி வாவைப்பதியில் குடிநீர்த் தொட்டி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

கன்னியாகுமரியை அடுத்த ஆமணக்கன்விளை அய்யா வைகுண்டசாமி வாவைப்பதியில் குடிநீர்த் தொட்டி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 1.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இந்த குடிநீர்த் தொட்டியை எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக செயலர்கள் என்.தாமரைபாரதி, எம்.மதியழகன், மாவட்ட துணைச் செயலர் கே.முத்துசாமி, ஒன்றிய அவைத் தலைவர் த.இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து கல்லுவிளை சந்திப்பில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் செலவில் அமைய உள்ள பயணிகள் நிழற்குடைக்கு எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com