நாகர்கோவிலில் நூல் வெளியீட்டு விழா

நாகர்கோவிலில் தொ.சூசைமிக்கேல் எழுதிய "வாரிக்கொடுத்த வளைகுடா' என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது

நாகர்கோவிலில் தொ.சூசைமிக்கேல் எழுதிய "வாரிக்கொடுத்த வளைகுடா' என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வி.கிலாரியூஸ் தலைமை வகித்தார். குறும்பனை பெர்லின் முன்னிலை வகித்தார். மங்காவிளை ராஜேந்திரன் வரவேற்றார். நூலை ஆசிரியரின் மனைவி புஷ்பமேரி சூமைமிக்கேல் வெளியிட, அதை பி.டிக்சன் பெற்றுக்கொண்டார். குமரி ஆதவன் நூல் திறனாய்வு உரையாற்றினார். ஜஸ்டின் திவாகர் பதிப்பாளர் உரையாற்றினார்.
இதில், ஈ.ஜோசப், எஸ்.பி.ஜான்சன், மரியதாசன்,  எழுத்தாளர் மலர்வதி, சாகர்வின்சென்ட், திருத்தமிழ்த்தேவனார், ஜூடி சுந்தர், ஜாக்குலின்மேரி, சப்திகா உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். நூல் ஆசிரியர் சூசைமிக்கேல் ஏற்புரையாற்றினார். கடிகை ஆன்றனி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com