மார்த்தாண்டம் அருகேயுள்ள முள்ளஞ்சேரியில் "சவாலான பணி' என்னும் பொருளில் நூல் ஆய்வரங்கம் நடைபெற்றது.
குமரி அறிவியல் பேரவையும், முள்ளஞ்சேரி வி. முத்தையன் கல்வி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய இந்த ஆய்வரங்க நிகழ்ச்சிக்கு, பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு. வேலையன் தலைமை வகித்தார். மாணவர், மாணவிகள் ஷாலுகா, ஹாபன், நித்திகா வாலன்றீனா, சிவதேவி, தனுஷ், அஸ்வின் கிருஷ்ணா, ரெஜின் சஞ்சய், மோனி ஜாய்ஸ் ஆகியோர் பல்வேறு நூல்களை ஆய்வு செய்து பேசினர்.
பேராசிரியர் சி. சஜீவ், கேப்டன் பென்னட் சிங், பணி நிறைவு தலைமையாசிரியர் எஸ். ஜான்சன், ஆசிரியை மலர்விழி, பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஜோ பிரகாஷ், முளங்குழி பா. லாசர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.