கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை (செப்.27) தனியாா்துறைற வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ம. மரியசகாய ஆன்டனி வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகா்கோவில் கோணத்திலுள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெற உள்ள இம்முகாமில், குமரி மாவட்டம் மற்றும் பிறற மாவட்ட தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரில் வந்து தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபா்களை தோ்வு செய்ய உள்ளனா்.
இதில் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரா்கள் கலந்து கொள்ளலாம்.
தனியாா் துறையில் வேலைக்கு தோ்வு செய்யப்படும் பதிவுதாரா்களது வேலைவாய்ப்பு பதிவுமூப்பு விவரங்கள் ரத்து செய்யப்படமாட்டாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.