நாகர்கோவில், ஆசாரிப்பள்ளம் துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக, அவற்றின் மின்வழித்தட பகுதிகளில் வியாழக்கிழமை ( செப்.26) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வல்லன்குமாரன்விளை, தடிக்காரன்கோணம், வடசேரி, ஆசாரிப்பள்ளம், நாகர்கோவில், ராஜாக்கமங்கலம், பெருவிளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன்கோவில், எம்.எஸ்.ரோடு, கல்லூரி சாலை, நீதிமன்ற சாலை, கே.பி.ரோடு, பால்பண்ணை, நேசமணிநகர், ஆசாரிப்பள்ளம், தோப்பூர், வேம்பனூர், அனந்தன்நகர், பார்வதிபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என நாகர்கோவில் மின் பகிர்மான செயற்பொறியாளர் சி.ராஜசேகர் தெரிவித்துள்ளார்.
குழித்துறை பகுதியில் நாளை மின்தடை
இதேபோல், குழித்துறை துணை மின் நிலையத்துக்குள்பட்ட படந்தாலுமூடு, சீனிவிளை, மடிச்சல், கறச்சிவிளை, அதங்கோடு, அதன் சுற்றுப்புற பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்.27) காலை 9முதல் மாலை 4 வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.