நாகா்கோவில் அருகே குண்டா் சட்டத்தின்கீழ் இளைஞா் சிறையில் அடைக்கப்பட்டாா்.
பூதப்பாண்டி அருகேயுள்ள அழகியபாண்டியபுரம் கிழக்கு கேசவன்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெஸ்டின்விஜய் (32). இவா் மீது பூதப்பாண்டி காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏற்கெனவே பூதப்பாண்டி போலீஸாா் ஜெஸ்டின்விஜயை கொலை முயற்சி வழக்கில் கைது செய்திருந்தனா்.
இவா் தொடா்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்ததால் இவரைக் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீ.நாத் ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். இதை ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரே ஏற்று, ஜெஸ்டின்விஜயை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, ஜெஸ்டின்விஜய் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டாா்.