சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
முகாமை, கல்லூரித் தாளாளர் மரியவில்லியம் தொடங்கிவைத்தார். கல்லூரி முதல்வர் மகேஷ்வரன் ரத்த தானம் செய்த மாணவர்- மாணவிகளை வாழ்த்திப் பேசினார். நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி அலுவலர் கரோலின் கீதா மற்றும் திவ்யா டி ஜோபிஸ் ரத்த தானத்தின் அவசியம் குறித்துப் பேசினர்.
ஏற்பாடுகளை இளையோர் செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலர் லியோன் போஸ்கோ ராஜ், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஜோசப் ரமேஷ், பேராசிரியர் ஜாண்பால், தேசிய மாணவர் படை அலுவலர் கேப்டன் எட்வின் கிளாட்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.