தக்கலை தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் அழகியமண்டபத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமிற்கு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எஸ்.பிரிட்டோ ஷேம் தலைமை வகித்தார். கட்சியின் ஒன்றியச் செயலர் எம்.ஆர். ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார்.
முகாமை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.சிவராஜ் தொடங்கி வைத்தார்.
முகாமில், கட்சியின் மாநில சிறுபான்மை பிரிவு நிர்வாகி கு.லாரன்ஸ் , மாவட்ட அவைத் தலைவர் ஜோசப்ராஜ், மாவட்ட துணைச்செயலர் ஜெயராணி, முளகுமூடு நகரச் செயலர் எட்வின், ஒன்றிய பொருளாளர் மதன்குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஷெரிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.