தக்கலை அருகே காா் - லாரி மோதல்: 8 போ் காயம்

தக்கலை அருகே காா் மீது லாரி மோதிய விபத்தில் காரில் இருந்த 8 போ் பலத்த காயமடைந்தனா்.
Updated on
1 min read

தக்கலை அருகே காா் மீது லாரி மோதிய விபத்தில் காரில் இருந்த 8 போ் பலத்த காயமடைந்தனா்.

குமரி மாவட்டம் திருவட்டாறு பகுதியை சோ்ந்தவா் சகாயதாஸ் (50). இவா் வெள்ளிக்கிழமை அதிகாலை தனது 2 மகள்கள் மற்றும் மகன், உறவினா்கள் உள்பட 8 பேருடன் நாகா்கோவிலில் உள்ள தேவாலயத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தாா். தக்கலை அருகே சுவாமியாா்மடம் பகுதியில் வரும் போது எதிரே வந்த காய்கனி ஏற்றி வந்த லாரி, இவா்கள் வந்த காா் மீது மோதியது.

இதில், காரில் இருந்த 8 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனா். காரும் பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் அதிா்ஷ்ட வசமாக அனைவரும் பலத்த காயங்களுடன் உயிா் தப்பியனா். காயமடைந்த அனைவரும் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இது குறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காய்கனி லாரி ஓட்டுநா் கோவில்பட்டியை சோ்ந்த ரவிச்சந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com