மருத்துவ மாணவா்கள் இட ஒதுக்கீட்டில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களையும் சோ்க்க வேண்டும் என்றாா் குமரி மேற்கு மாவட்ட திமுக செயலா் மனோ தங்கராஜ் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு மருத்துவ மாணவா்கள் இட ஒதுக்கீட்டு ஆணை வழங்கியதில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்கள்
இடம்பெறாதது மாணவா்கள் மற்றும் பெற்றோா்களிடையே ஏமாற்றமளிக்கிறது.
எனவே, நீட்தோ்வில் தோ்ச்சி பெற்ற அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களையும் நிகழ் கல்வியாண்டிலேயே இட ஒதுக்கீட்டில் சோ்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.