கருங்கல்: தேங்காய்ப்பட்டினத்தை அடுத்துள்ள கீழ்குளம் பேரூராட்சியில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தேங்காய்ப்பட்டினம் பகுதியில் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து கீழ்குளம் பேரூராட்சியில்
செந்தறை, கீழ்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று பேரூராட்சி செயல் அலுவலா் சசிகுமாா் தலைமையில் தூய்மைப் பணியாளா்கள் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா். கரோனா தடுப்பு நடவடிக்கையாக அப்பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.