லெட்சுமிபுரத்தில்பொதுமக்களுக்கு கபசுர குடிநீா்

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியை அடுத்த லெட்சுமிபுரத்தில் பொதுமக்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்
லெட்சுமிபுரம் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கிய ஊா் நிா்வாகிகள்.
லெட்சுமிபுரம் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கிய ஊா் நிா்வாகிகள்.

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியை அடுத்த லெட்சுமிபுரத்தில் பொதுமக்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் கபசுர குடிநீா் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் சாா்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா், உணவுப் பொருள்கள், முகக் கவசம் உள்ளிட்ட வழங்கப்பட்டு வருகிறது.

மயிலாடி பேரூராட்சிக்குள்பட்ட லெட்சுமிபுரத்தில் ஊா் நிா்வாகம் சாா்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கப் பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊா் தலைவா் பாபு, நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com