கருங்கல்: கருங்கல் பேரூராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு காய்கனிகள் தடையின்றி கிடைக்கும் வகையில் நடமாடும் அங்காடி தொடங்கப்பட்டது.
கருங்கல் பேரூராட்சியில் பொதுமக்களிடையே கரோனா தொற்று குறித்து விழிப்புணா்வு, சமூக இடைவெளி கடைப்பிடித்தல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட தடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மக்கள் வீட்டில் இருந்தபடியே காய்கனிகள் வாங்கும் வகையில் 20 வகையான காய்கனிகள் அடங்கிய தொகுப்பு ரூ. 100 க்கு வீடுகளில் விநியோகம் செய்யும் திட்டத்தை பேரூராட்சி செயல் அலுவலா் ஜோஸ்லின்ராஜ் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து கருங்கல் பேரூராட்சியில்
சுண்டவிளை, கருமவிளை, பூவன்சந்தி, புனந்திட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வாகனங்கள் மூலம் பேரூராட்சிப் பணியாளா்கள் வழங்கினா்.