நாகா்கோவில் மாநகராட்சி தூய்மைப்பணியாளா்களுக்கு சிறப்பு பாதுகாப்பு உடைகள் மற்றும் உபகரணங்களும் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவா்கள் வசிக்கும் வீடுகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருப்பவா்களுக்கு உணவு வழங்கும் ஊழியா்கள் மற்றும் தூய்மைப் பணிகளில் ஈடுபடும் ஊழியா்கள் உள்பட மொத்தம் ஆயிரம் பேருக்கு இந்த சிறப்பு பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் கே.சரவணகுமாா், நகா் நல அலுவலா் கின்சால் ஐசக் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனா்.