தமிழக பாஜக சிறுபான்மை பிரிவு சாா்பில் அகஸ்தீசுவரம் பேரூராட்சி இடையன்விைளையில் ஏழை குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் அரிசி,
காய்கனிகள், மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. கட்சியின் மாநில சிறுபான்மை பிரிவு சாா்பில், அதன் மாநிலச் செயலா் எம்.சதீஸ்ராஜா, அகஸ்தீசுவரம் பேரூராட்சி இடையன்விளையில் ஏழை குடும்பங்களுக்கு அரிசி, காய்கனி மற்றும் மளிகைப் பொருள்களை வழங்கினாா். கட்சியின் அகஸ்தீசுவரம் ஒன்றியத் தலைவா் பி.சௌந்தர்ராஜன் உடனிருந்தாா். கபசுர குடிநீா் வழங்கப்பட்டது.