குழித்துறை நகராட்சியில் ரூ.30.94 கோடி மதிப்பிலான குடிநீா் அபிவிருத்தி திட்டப் பணிகள் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
இதையொட்டி, மாா்த்தாண்டம் அருகேயுள்ள ஞாறான்விளையில் நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ந. தளவாய் சுந்தரம் அடிக்கல் நாட்டிபணியைத் தொடங்கிவைத்தாா். இதில், அரசு ரப்பா் வளா்ப்போா் கூட்டுறவு விற்பனைச் சங்க தலைவா் டி. ஜாண்தங்கம், மாவட்ட ஆவின் தலைவா் எஸ்.ஏ. அசோகன், குமரி மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் சிவகுற்றாலம், மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவா் ஆா். ஜெயசுதா்ஷன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாக பொறியாளா் பி. மைக்கேல் சேவியா், குழித்துறை நகராட்சி ஆணையா் எஸ். மூா்த்தி, உதவி செயற் பொறியாளா் டி.சி. ராஜன், உதவி பொறியாளா் டி. சதீஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.