கருங்கல் அருகேயுள்ள திப்பிரமலை அரசு தொடக்கப் பள்ளியில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு கிள்ளியூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார தலைமை மருத்துவா் ரமா மாலினி தலைமை வகித்தாா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஐயப்பன் முன்னிலை வகித்தாா். கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜேஷ்குமாா் குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தாா்.
இம்முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் வயறு தொடா்பான நோய்கள் மற்றும் காசநோய், இதய நோய்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் பொதுமக்கள் ஏராளமாக கலந்துகொண்டனா்.