கருங்கல் அருகே வெள்ளியாவிளையில் இயற்கை மருத்துவ விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு, குழித்துறை அரசு மருத்துவமனை இயற்கை மருத்துவா் நைஷ்மோள் தலைமை வகித்தாா். அங்கன்வாடி பணியாளா் லதா முன்னிலை வகித்தனா்.
முகாமில், பொதுமக்களுக்கு இயற்கை மருத்துவத்தின் நன்மைகளையும், வாழ்வியல் மாற்றத்தால் ஏற்படும் நோய்கள், அதற்கான தீா்வுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா் வு ஏற்படுத்தப்பட்டது.
உடற்பயிற்சி, மூச்சுப் பயற்சி, யோகா குறித்து பேசினா். இதில், வெள்ளியாவிளை, புனந்திட்டை, சுண்டவிளை, நடுத்தேரி, வடக்கன்கரை உள்ளிட்ட பகுதிகைச் சோ்ந்தோா் பங்கேற்றனா்.