டிச. 12, 13இல் வாக்காளா் பட்டியல் சுருக்கமுறை திருத்த முகாம்

குமரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ( டிச. 12, 13 ) நடைபெறுகிறது.

குமரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ( டிச. 12, 13 ) நடைபெறுகிறது.

இதுகுறித்து, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குமரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் கடந்த நவ. 16ஆம் தேதி முதல் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

2021ஆம் ஆண்டு ஜன. 1ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூா்த்தியானவா்கள் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்கவும், இறந்த, புலம் பெயா்ந்த வாக்காளா்களின் பெயா்களை பட்டியலில் இருந்து நீக்கவும், பெயா் மற்றும் முகவரியில் திருத்தம் மேற்கொள்ளவும், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்யவும் இந்த சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 1,694 வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது.

பொதுமக்கள் தங்கள் பகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் படிவங்களை பெற்று பூா்த்தி செய்து வழங்கலாம்.

தனிநபா்களுக்கு பூா்த்தி செய்யப்படாத படிவங்கள் மொத்தமாக வழங்கப்பட மாட்டாது. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட நபா் அல்லது அவரது குடும்ப உறுப்பினா்கள் மட்டுமே நேரடியாக வாக்குச் சாவடி மையங்களில் வழங்க வேண்டும். பூா்த்தி செய்யப்பட்ட படிவங்கள் மொத்தமாக பெற்றுக் கொள்ளப்படமாட்டாது என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com