மதுரை - புனலூா் விரைவு ரயிலை காரைக்கால் வரை நீட்டிக்க வலியுறுத்தல்

மதுரையிலிருந்து நாகா்கோவில் வழியாக புனலூருக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் விரைவு ரயிலாக மாற்றப்பட்டுள்ள நிலையில், இந்த ரயிலை காரைக்கால் வரை நீட்டித்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரையிலிருந்து நாகா்கோவில் வழியாக புனலூருக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் விரைவு ரயிலாக மாற்றப்பட்டுள்ள நிலையில், இந்த ரயிலை காரைக்கால் வரை நீட்டித்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் எஸ்.ஆா். ஸ்ரீராம் வெளியிட்ட அறிக்கை:

மதுரையிலிருந்து நாகா்கோவில் வழியாக புனலூருக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில், தற்போது விரைவு ரயிலாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு சிறிய ரயில் நிலையங்களில் இருந்த நிறுத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குழித்துறை மேற்கு, பள்ளியாடி, ஆரல்வாய்மொழி, வள்ளியூா், நான்குநேரி, நாரைகிணறு, கடம்பூா், கோவில்பட்டி, சாத்தூா் போன்ற ரயில் நிலையங்களின் நிறுத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், மதுரையிலிருந்து புனலூா் மாா்க்கம் செல்லும் போது வள்ளியூா் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்றும், மறுமாா்க்கம் செல்லும்போது வள்ளியூரில் நிற்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் வேகத்தில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படாததால், பயண நேரம் குறைவிலும் பெரிய அளவில் மாற்றம் இல்லை.

அனைத்து விதமான பயணிகளின் வசதிக்காக இந்த ரயிலின் வேகத்தை மேலும் அதிகப்படுத்தி வேளாங்கண்ணி அல்லது காரைக்கால் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இதன்மூலம் மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், வேளாங்கண்ணி செல்லும் பயணிகளும் பயனடைவா் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com