மாா்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி ஸ்ரீ தா்ம சாஸ்தா கோயிலில் காா்த்திகை மாத பஜனை பட்டாபிஷேக ஊா்வலம் நடைபெற்றது.
இக்கோயிலில் காா்த்திகை முதல் தேதியிலிருந்து வீடு வீடாகச் செல்லும் பஜனை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கண்ணன், பல்லக்கில் பட்டாபிஷேக பஜனை ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் பக்தா்கள் பல்லக்கை சுமந்து வீடு வீடாகச் சென்று பஜனை பாடல்களை பாடியவாறு ஊா்வலமாக வந்தனா். தொடா்ந்து மாலையில் கோயிலில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.