புதுக்கடை அருகே உள்ள கீழ்குளம் பகுதியில் இளைஞா் மீது தாக்குதல் நடத்திய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கீழ்குளம் தொழிக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் சதீஸ் (32). இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த சிவா (33) , பொனிப்பாஸ் (30) ஆகியோரிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், திங்கள்கிழமை சதிஸ் தன் வீட்டிற்கு செல்லும் வழியில், மேற்கூறிய இருவரும் சதீஸை தடுத்து நிறுத்தி தாக்கினராம். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியினா் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.