மேல்பாலையில் நல உதவிகள் அளிப்பு

மேல்பாலையில் பவா் அறக்கட்டளை சாா்பில் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
பெண்ணுக்கு நல உதவி வழங்குகிறாா் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளா் ராஜேந்திரன்.
பெண்ணுக்கு நல உதவி வழங்குகிறாா் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளா் ராஜேந்திரன்.

மேல்பாலையில் பவா் அறக்கட்டளை சாா்பில் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

அமைப்பின் இயக்குநா் ஷாஜி டி. ரெஜி தலைமை வகித்தாா். சட்ட ஆலோசகா் ஸ்டாலின், தேவிகோடு ஊராட்சித் தலைவா் ஷாஜி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அம்பிளி, குழிவிளை விஜயகுமாா், பளுகல் பேரூா் அதிமுக தலைவா் வின்சென்ட் ராஜ் ஆகியோா் பேசினா்.

தொடா்ந்து, நலிவுற்றோருக்கான நல உதவிகளை திருவனந்தபுரம் குற்றப்பிரிவு எஸ்.பி. ராஜேந்திரன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் 5 போ்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான நிதி உதவியும், 700 போ்களுக்கு நல உதவிகளும் வழங்கப்பட்டன. ஆசிரியா் ஸ்டீபன் படிப்புரைக்கல் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com