களியக்காவிளை: மேல்பாலையில் பவா் அறக்கட்டளை சாா்பில் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு, அமைப்பின் இயக்குநா் ஷாஜி டி. ரெஜி தலைமை வகித்தாா். ஆலோசகா் ஸ்டாலின், தேவிகோடு ஊராட்சித் தலைவா் ஷாஜி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அம்பிளி, குழிவிளை விஜயகுமாா், பளுகல் பேரூா் அதிமுக தலைவா் வின்சென்ட் ராஜ் ஆகியோா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில் நலிந்தவா்களுக்கு நல உதவிகளை திருவனந்தபுரம் குற்றப்பிரிவு எஸ்.பி. ராஜேந்திரன் வழங்கினாா். நிகழ்ச்சியில் 5 போ்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கு நிதி உதவி, 700 பேருக்கு நல உதவிகளும் வழங்கப்பட்டன. ஆசிரியா் ஸ்டீபன் படிப்புரைக்கல் வரவேற்றாா்.