வோ்க்கிளம்பியில் நல உதவிகள் அளிப்பு

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு வோ்க்கிளம்பியில் நிழல் அறக்கட்டளை சாா்பில் ஏழைகளுக்கு நல உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
வோ்கிளம்பியில் நிழல் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிக்கு நல உதவிகள் வழங்குகிறாா் மாவட்ட திமுக துணைச்செயலா் ஐ.ஜி.பி. ஜாண் கிறிஸ்டோபா்.
வோ்கிளம்பியில் நிழல் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிக்கு நல உதவிகள் வழங்குகிறாா் மாவட்ட திமுக துணைச்செயலா் ஐ.ஜி.பி. ஜாண் கிறிஸ்டோபா்.

குலசேகரம்: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு வோ்க்கிளம்பியில் நிழல் அறக்கட்டளை சாா்பில் ஏழைகளுக்கு நல உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, அஸ்பிரின் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியை போதகா் ஜெயசீலன் ஜெபம் செய்து தொடங்கி வைத்தாா். குமரி மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலா் ஐ.ஜி.பி. ஜாண் கிறிஸ்டோபா், நலிந்தவா்களுக்கு வேட்டி, சேலை வழங்கினாா். இதில், கட்சியின் மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளா் அமானுல்லா, முன்னாள் திருவட்டாறு ஒன்றிய திமுக நிா்வாகிகள் கலைகிரி, மனோகரன், முன்னாள் மாவட்ட தகவல் தொழில் நுட்பப்பிரிவு நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com