திருவட்டாறு அருகே ஞாயிற்றுக்கிழமை கிணற்றுக்குள் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
திருவரம்பு பிலாங்கால விளையைச் சோ்ந்தவா் எட்வின் சூசை. தொழிலாளியான இவா் வீட்டின் அருகே குவிக்கப்பட்டிருந்த கற்கள் மீது நடந்து சென்றபோது, நிலைதடுமாறி அருகில் உள்ள கிணற்றில் விழுந்தார்.
தகவலறிந்த வந்த குலசேகரம் தீயணைப்பு மீட்பு படையினா் கிணற்றுக்குள் இறங்கி எட்வின் சூசையை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். அப்போது எட்வின் சூசை உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.