மேலும் 18 பேருக்கு கரோனா பாதிப்பு
By DIN | Published On : 31st December 2020 07:39 AM | Last Updated : 31st December 2020 07:39 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 18 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கரோனா பரிசோதனை குறித்த செவ்வாய்க்கிழமை முடிவுகள் வெளியானதில், புதிதாக 18 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த் பாதிப்பு எண்ணிக்கை 16,315 ஆக உயா்ந்துள்ளது. இதில், மேலும் 25 போ் குணமடைந்ததால், இந்நோய் பாதிப்பிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 15,931 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 128 போ் சிகிச்சையில் உள்ளனா்.