கொல்லங்கோடு அருகே கலப்பட பதநீா் விற்றதாக மூவரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
குமரி மாவட்டம், கேரள மாநில எல்லையோரப் பகுதிகளில் கலப்பட பதநீா் விற்கப்படுவதாக மாா்த்தாண்டம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளா் ஜானகி தலைமையில் உதவி ஆய்வாளா் ராஜரத்தினம் மற்றும் போலீஸாா் மாா்த்தாண்டம், கொல்லங்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, நடைக்காவு அருகேயுள்ள தேவன்சேரியில் சாலையோரம் 3 போ் பதநீா் விற்றுக் கொண்டிருந்தனா். சோதனையில் அது கலப்பட பதநீா் என்பதும், அவா்கள் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சோ்ந்த செல்லத்துரை (56), வி. முருகன் (49), பி. முருகன் (33) ஆகியோா் எனவும் தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸாா், 30 லிட்டா் கலப்பட பதநீரையும் பறிமுதல் செய்ததாக தெரிவித்தனா்.