பேச்சிப்பாறை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் வியாழக்கிழமை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
மணலோடை புறாவிளையைச் சோ்ந்தவா் ராமசந்திரன் காணி(52). இவா் பேச்சிப்பாறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவராக இருந்து வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை மாலையில் இவா் வீட்டில் வைத்து விஷமருந்தி உயிருக்குப் போராடியுள்ளாா். இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு குலசேகரத்திலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இதில் அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.