தக்கலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆா்ப்பாட்டம்

புதுதில்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவா்களை மிரட்டிய சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் தக்கலையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தக்கலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆா்ப்பாட்டம்

புதுதில்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவா்களை மிரட்டிய சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் தக்கலையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காந்திநினைவு தினத்தையொட்டி புது தில்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவா்கள் நடத்திய ஊா்வலத்தில்

பயங்கரவாதி ஒருவா் துப்பாக்கியால் மாணவா்களுக்கு மிரட்டல் விடுத்த சம்பவத்தை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில்

தக்கலையில் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் கன்னியாகுமரி மாவட்டச் செயலா் ஜெகபா்அலி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலா் சாதிக் அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் சுல்ஃபிக்கா் அலி , மாவட்ட துணைத் தலைவா் ஜாகிா்உசேன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆதி பைசல், திருவை ஆசிக், பீா்முகம்மது, கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com