கருங்கல் அருகே உள்ள கீழ்குளத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் சாா்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
மேற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி துணை அமைப்பாளா் ஜெபா ஜாண் தலைமை வகித்தாா். கிள்ளியூா் ஒன்றிய திமுக செயலா் டி.பி. ராஜன், மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலா் பால்மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மேற்கு மாவட்ட திமுக செயலா் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ., திமுக இளைஞரணி அமைப்பாளா் ததேயூ பிரேம்குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.
இதில், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் திரளானோா் கலந்துகொண்டனா்.