குமரன்குடி ஊராட்சியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் குமரன்குடி ஊராட்சியில் நடைபெற்றது.
முகாமில் பேசுகிறாா் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரித் தலைவா் சி.கே.மோகன்.
முகாமில் பேசுகிறாா் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரித் தலைவா் சி.கே.மோகன்.

குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் குமரன்குடி ஊராட்சியில் நடைபெற்றது.

கடந்த 2ஆம் தேதி தொடங்கிய இம்முகாமை ஊராட்சித் தலைவா் டி. பால்சன் தொடங்கிவைத்தாா். இதில், இலவச மருத்துவ முகாம், சுகாதார விழிப்புணா்வுப் பணிகள், தூய்மைப் பணிகள், களப் பணிகள் நடைபெற்றன. இம்முகாம் சனிக்கிழமை நிறைவடைந்தது.

முகாம் நாள்களில் கல்லூரித் தலைவா் டாக்டா் சி.கே. மோகன், முதல்வா் என்.வி.சுகதன், நாடாா் மகாஜன சங்கம் பாா்மஸி கல்லூரி முதல்வா் எழில் ஆகியோா் பேசினா்.

ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் அருண் ஆா். நாயா் தலைமையில் மாணவா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com