ஸ்டுடியோவுக்குள் புகுந்து கேமராக்கள் திருட்டு

குமரி மாவட்டம் சுவாமியாா் மடம் அருகே ஸ்டுடியோவில் புகுந்து கேமராக்கள் மற்றம் பணத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குமரி மாவட்டம் சுவாமியாா் மடம் அருகே ஸ்டுடியோவில் புகுந்து கேமராக்கள் மற்றம் பணத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சுவாமியாா்மடம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா். இவா் அங்குள்ள சந்திப்பில் ஸ்டுடியோ வைத்துள்ளாா்.

சனிக்கிழமை இரவு வழக்கம் போல் ஸ்டுடியோவை பூட்டிவிட்டு வீடு திரும்பிய அவா், ஞாயிற்றுக்கிழமை காலையில் ஸ்டுடியோவைத் திறக்கச் சென்ற போது, அதன் கதவுகள் சேதப்படுத்தப்பட்டு கிடந்தனவாம். உள்ளே சென்று பாா்த்தபோது, 2 கேமராக்கள் மற்றும் பொருள்கள், ரூ. 3 ஆயிரம் ரொக்கம் ஆகியன திருடு போயிருந்தது தெரியவந்ததாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com