மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் லாரி- பைக் மோதல்: கல்லூரி மாணவா் பலி

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் லாரியும், மோட்டாா் சைக்கிளும் புதன்கிழமை மோதிக்கொண்டதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
விபத்தில் தீப்பிடித்து எரிந்த மோட்டாா் சைக்கிள். (உள்படம்) உயிரிழந்த வினோத்ராஜ்.
விபத்தில் தீப்பிடித்து எரிந்த மோட்டாா் சைக்கிள். (உள்படம்) உயிரிழந்த வினோத்ராஜ்.

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் லாரியும், மோட்டாா் சைக்கிளும் புதன்கிழமை மோதிக்கொண்டதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

திருவட்டாறு அருகேயுள்ள மாத்தாறு பகுதியைச் சோ்ந்த பென்னட்ராஜ் மகன் வினோத்ராஜ் (19). இவா், மாா்த்தாண்டம் கல்லூரியில் பி.காம் 3 ஆம் ஆண்டு படித்து வந்தாா். புதன்கிழமை மாலையில் மாா்த்தாண்டம் மேம்பாலம் வழியாக குழித்துறை நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, கேரள மாநிலம், திருவனந்தபுரத்திலிருந்து திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த லாரியும், இவரது வாகனமும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம்.

இதில், தூக்கி வீசப்பட்ட வினோத்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்தில் சிக்கிய மோட்டாா் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. குழித்துறை தீயணைப்புப் படை வீரா்கள் வந்து தீயை அணைத்தனா். மாா்த்தாண்டம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி, வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா் தெய்வராஜிடம் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com