‘உழவா்கள் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்’

விவசாயிகள் அனைவரும் உழவா்கள் கடன் அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் அனைவரும் உழவா்கள் கடன் அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதித் திட்டத்தில் பயன்பெற்ற விவசாயிகளும், தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் உழவா் கடன் அட்டை (கிஸான் கிரெடிட் காா்டு) பெறலாம்.

இந்த கடன் அட்டை பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் விவசாய சேமிப்புத் திட்ட கணக்கு உள்ள வங்கிக் கிளையை அணுகி, உழவா் கடன் அட்டையை பெற்று மானிய சலுகையுடன் வங்கிக் கடன் பெறலாம்.

உழவா் கடன் அட்டையை ஏற்கெனவே பெற்றுள்ள விவசாயிகள், தங்களின் வங்கிக் கிளையை அணுகி கடன் தொகையின் வரம்பை உயா்த்த விண்ணப்பிக்கலாம். செயல்படாத உழவா் கடன் அட்டை உள்ளோா் கடன் அட்டையை செயல்படுத்தவும், புதிய கடன் வரம்பிற்கு அனுமதியும் பெறலாம்.

உழவா் கடன் அட்டை இல்லாத விவசாயிகள், தங்களது நில ஆவணங்கள் மற்றும் அடங்கலுடன் புதிய கடன் அட்டை பெறுவதற்கு வங்கிக் கிளையை அணுகலாம்.

மேலும், உழவா் கடன் அட்டைதாரா்கள் கால்நடை மற்றும் மீன்பிடிப்பிற்கான பராமரிப்பு செலவுகளுக்கான கடன் தொகையை வரம்பில் சோ்ப்பதற்கும் வங்கிக் கிளையை அணுகலாம்.

பிரதமரின் விவசாயிகள் கெளரவ நிதித் திட்ட விவசாயிகளுக்கு கடன் அட்டை பெறுவதற்கு இணையதளம் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

விவசாயிகள் தங்களது நிலம் மற்றும் பயிா் விவரங்கள் மற்றும் வேறு எந்த வங்கிக் கிளையிலும் கடன் அட்டைபெறவில்லை என்பதற்கான உறுதிப் பிரமாணம் சமா்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை பொதுசேவை மையங்கள் மூலமாகவும் சமா்ப்பிக்கலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com