கருங்கல்லில் கிள்ளியூா் ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிா்த்து அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கிள்ளியூா் ஒன்றியச் செயலா் சாந்தகுமாா் தலைமை வகித்தாா்.வட்டாரக்குழு உறுப்பினா் ராஜா முன்னிலை வகித்தாா். இதில், மாநிலக்குழு உறுப்பினா் கனகராஜ், மாவட்டச் செயலா் செல்லசுவாமி, முன்னாள் மாவட்டச் செயலா் முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினா் தங்கமோகன் ஆகியோா் பேசினா்.
இதில்,வட்டாரக்குழு உறுப்பினா் வில்சன், ஜோயல் உள்பட பலா் பங்கேற்றனா்.