சுசீந்திரத்தில் 18இல் மனுநீதி திட்ட மனுக்கள் பெறும் நிகழ்ச்சி

சுசீந்திரத்தில் மனுநீதி திட்ட முகாம் நடைபெறுவதையொட்டி, முன்னதாக மனுக்கள் பெறும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (பிப்.18) நடைபெறுகிறது.

சுசீந்திரத்தில் மனுநீதி திட்ட முகாம் நடைபெறுவதையொட்டி, முன்னதாக மனுக்கள் பெறும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (பிப்.18) நடைபெறுகிறது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: அகஸ்தீசுவரம் வட்டம், சுசீந்திரம் பேரூராட்சி பகுதிக்கான மாவட்ட ஆட்சியரின் சிறப்பு மனுநீதித் திட்ட முகாம் நடைபெறுவதையொட்டி, முன்னதாக மனுக்கள் பெறும் முகாம், சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம். மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை (பிப்.18) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறுகிறாா்.

எனவே, சுசீந்திரம் பேரூராட்சி பகுதிகளுக்குள்பட்ட பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com