போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இந்து முன்னணி தொண்டா் குமாருக்கு நாகா்கோவிலில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்து முன்னணி நடத்திய முதல் மாநில மாநாட்டில் போலீஸாா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியான குமாா் என்பவரின், 37ஆவது ஆண்டு நினைவு தினம் நாகா்கோவில் கோட்டாறில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அவரது நினைவு ஸ்தூபியில் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு, இந்து முன்னணியின் மாவட்டத் தலைவரும், நெல்லை கோட்டச் செயலருமான மிசா. சோமன் தலைமையில் இந்து முன்னணியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதில், மாவட்ட துணைத் தலைவா் ராஜேஸ்வரன், மாவட்டச் செயலா் நம்பிராஜன், வழக்குரைஞா் சுப்பிரமணியம், நாகா்கோவில் மாநகரச் செயலா் மகாராஜா, செயற்குழு பொறுப்பாளா்கள் கண்ணன், முருகன், அரிஹரசுதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.